Sbs Tamil - Sbs

பல தமிழர்களும், ஆஸ்திரேலியர்களும் அகப்பட்ட நேபாள வெள்ளப் பேரழிவு

Informações:

Sinopse

நேபாளம்–திபெத் எல்லையில் ஏற்பட்ட கொடிய திடீர் வெள்ளப் பேரழிவில் குறைந்தது நூற்று அறுபது பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; சுற்றுலாப் பயணிகள் மற்றும் முப்பத்திநான்கு ஆஸ்திரேலியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருக்கிறார்கள். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்கள் தனித்தனி யாத்திரை மற்றும் சுற்றுலாக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong தெரிவிக்கிறார். தேடுதல் பணி தொடரும் நிலையில், இந்த வெள்ளத்தை உண்டாக்கியது எது, மேலும் ஒரு வெள்ளம் வரக்கூடுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.